அனைத்து மதுபான சாலைகளுக்கும் சீல்..

அனைத்து மதுபான சாலைகளுக்கும் சீல்..

திருகோணமலையில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மறு அறிவித்தல் வரை சீல் வைக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மதுவரி திணைக்கள அதிகாரி எஸ்.கே.வணிகசிங்க தெரிவித்தார். கிழக்கு மாகாண மதுவரித் திணைக்கள மாகாண பணிப்பாளர் ஏ.தர்மசீலனின் பணிப்புரைக்கு அமைய திருகோணமலை மதுவரித் திணைக்கள அதிகாரி எஸ்.கே. வணிகசிங்கவின் வழிகாட்டலுடன் திருகோணமலை பிராந்திய மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி ஜானி அத்தநாயக்க குழுவினரால் திருகோணமலையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மதுபான சாலைகளில் திருட்டுத்தனமாக மதுபான விற்பனை நடைபெறுவதாக திருகோணமலை மதுவரித் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைவாக அனைத்து மதுபான சாலைகளுக்கும் கீழ் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று (30) பிற்பகல் முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து மதுபான சாலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டதாக திருகோணமலை மதுவரித் திணைக்களத்தின் அதிகாரி தெரிவித்தார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *