அமீரகத்தில் புதிதாக 1,875 பேருக்கு தொற்று.

அமீரகத்தில் புதிதாக 1,875 பேருக்கு தொற்று.

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 47 ஆயிரத்து 634 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 1,875 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரத்து 6 ஆக அதிகரித்தது.

இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,939 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக அமீரகத்தில் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 64 ஆயிரத்து 971 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 3 பேர் பலியானார்கள். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,526 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 13 ஆயிரத்து 509 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.பொதுமக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *