அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் படையினர் குவிப்பு

அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் படையினர் குவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது.

அதனடிப்படையில், பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்கான கூட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அதன் போது திடீரென டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டனர் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காங்கிரஸ் உறுப்பினர்கள் முன்னிலையில் துணை அதிபர் மைக் பென்ஸ் தேர்தலில் வெற்றிபெற்ற பைடனை வெற்றியாளராக அங்கீகரிக்கும் நடைமுறைகளை மேற்கொண்டதோடு, பைடனை வெற்றியாளராக அங்கீகரிக்கும் நடைமுறை நடந்து கொண்டிருந்த போது திடீரென நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

அத்துடன் அவர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய முற்பட்டனர். இதனால், பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸார் அவர்களை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன் போது பாதுகாப்பு படையினருக்கும் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

பாதுகாப்பு படையினரை மீறி நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய ஆயிரக்கணக்கானோர் முயற்சித்தனர். இதனால், பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அந்த துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.

அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பெற்றுவந்த பெண் தற்போது உயிரிழந்தார் என அமெரிக்காவின் சி.என்.என் செய்தி நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பெண் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டதையடுத்து நாடாளுமன்ற கட்டிட முற்றுகை போராட்டம் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *