அரசாங்கம் உறுதிமொழியை வழங்க வேண்டும் – ரணில்

அரசாங்கம் உறுதிமொழியை வழங்க வேண்டும் – ரணில்

ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த நிபுணர்கள் குழுவை நியமிப்பதாக அரசாங்கம் உறுதிமொழியை வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டுள்ளார். இணையவழி கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், தியாகங்களை செய்ய வேண்டும் என மக்களிடமே கோரிக்கை விடுப்பதற்கு அரசாங்கத்திற்கு எவ்வித உரிமையும் கிடையாது.

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த நிபுணர்கள்கள் குழுவை நியமிக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளமைமைய அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த கோரிக்கையை இலங்கையை தவிர்ந்த ஏனைய நாடுகள் நிறைவேற்றியுள்ளன. இந்த சூழ்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த நிபுணர்கள் குழுவை நியமிப்பதாக அரசாங்கம் உறுதிமொழியை வழங்க வேண்டும் என்றார். அண்மையில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியாற்றிய உரையின் போது பொதுமக்கள் தற்போதைய சூழ்நிலையில் பல்வேறு தியாகங்களை செய்யத் தயாராக வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *