அரிசி வாங்க திடீரென குவிந்த மக்கள்

அரிசி வாங்க திடீரென குவிந்த மக்கள்

அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என வதந்தி பரவியதை அடுத்து இன்று (28) காலை காலி பெலிகஹா பகுதியில் உள்ள அரிசி மொத்த விற்பனை நிலையத்திற்கு முன்பாக பெருமளவு மக்கள் குவிந்துள்ளனர்.

இந்நிலைமை காரணமாக மொத்த வியாபாரிகளினால் வர்த்தகர்களுக்கு குறைந்தளவிலான அரிசி மாத்திரமே வழங்கப்பட்டு வந்ததுடன், விற்பனை நிலையங்கள் மூலம் நுகர்வோருக்கு 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

சந்தையில் அனைத்துப் பொருட்கள் மற்றும் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதால், அரிசி விலை அதிகரித்து அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *