ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா கொரோனா தடுப்பூசி நன்கொடை – ஐ.நா.சபை பாராட்டு

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா கொரோனா தடுப்பூசி நன்கொடை – ஐ.நா.சபை பாராட்டு

ஐ.நா.சபை பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், ஐ.நா. ஆப்கானிஸ்தான் உதவி மிஷன் திட்டத்தின், சிறப்பு பிரதிநிதியான டிபோரா லியான்ஸ் ஆகியோர் ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் நிருபர்களிடம் கூறியதாவது,

ஆப்கானிஸ்தானில் கொரோனா 2-வது அலை எழுந்துள்ளது. விழிப்புடன் இல்லாவிட்டால் 3-வது அலை ஏற்படக்கூடும். தடுப்பூசி போடும்பணி தற்போது தொடங்கி உள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கி உள்ளது பாராட்டுக்குரியது. அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறி உள்ளனர். சீனாவும் குறிப்பிட்ட அளவிலான தடுப்பூசிகளை ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் ஐ.நா. தூதர் டி.எஸ்.திருமூர்த்தி கூறுகையில், “ஆப்கானிஸ்தானில் பேரிடர் கால உணவு பாதுகாப்பின்மை ஏற்படக்கூடாது எனும் நோக்கில் இந்தியா மனிதாபிமான அடிப்படையில் 75 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை வழங்கி உள்ளது. மேலும் கொரோனா பேரிடரை எதிர்கொள்ள, 9 லட்சத்து 68 ஆயிரம் டோஸ் அளவு கோவேக்சின் தடுப்பூசியை ஆப்கானிஸ்தானுக்கு வழங்க சம்மதித்துள்ளது. இதில் 5 லட்சம் டோஸ்கள் இந்தியா மானியமாக வழங்குகிறது” என்றார்.ஆப்கானிஸ்தானில் 56 ஆயிரத்து 177 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதில் 2 ஆயிரத்து 466 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *