ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள திடுக்கிடும் தகவல்!

ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள திடுக்கிடும் தகவல்!

நேற்றிரவு ஜனாதிபதி இல்லத்தை முற்றுகையிட்டு இன்று அதிகாலை வரை இடம்பெற்ற களேபரத்தின் பின்னணியில் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாத குழு ஒன்று உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு திடுக்கிடும் தகவலை கூறியுள்ளது.

இதன்போது இரும்புக் ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளுடன் ஆயுதம் ஏந்திய குழுவினர், ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டிவிட்டு, மிரிஹான பங்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று கலவரத்தை ஏற்படுத்தியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வன்முறையில் ஈடுபட்டவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்கள் நாட்டில் அரபு வசந்தத்தை உருவாக்குவோம் என கோசமிட்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் கலவரக்காரர்கள் திட்டமிட்ட வகையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களைத் தூண்டிவிட்டு நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தியுள்ளமை கைது செய்யப்பட்ட நபர்கள் மூலம் தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *