இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்த ஒருவர் கைது

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்த ஒருவர் கைது

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக இலங்கைக்குள் நுழைந்த ஒருவரை முள்ளியவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் முள்ளியவளைப் பகுதியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கூறினார்.

இந்நபர் கட்டுநாயக்க விமான நிலையமூடாக கடந்த 2009 ஆம் ஆண்டில் சென்னைக்குச் சென்றுள்ளதாகவும் பின் இந்தியாவின் நாகபட்டினத்தில் வசித்து வந்த நிலையில் 2021 மார்ச் 12ஆம் திகதி கடல் வழியாக சட்ட விரோதமாக இலங்கைக்குள் நுழைந்துள்ளார் எனவும் அவர் கூறினார்.

சுமார் இரண்டரை மாதங்கள் தலைமறைவாக இருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *