இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கை!

இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கை!

இராணுவத்தினரால் யாழ் நகரப்பகுதி சுத்தமாக்கி கிருமித் தொற்று நீக்கி மருந்து விசுறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகரப் பகுதியில் அண்மையில் அதிகளவானோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய யாழ்ப்பாண நகரின் பஸார் வீதியே இராணுவத்தினரால் நீரூற்றி கழுவப்பட்டு கிருமித் தொற்று நீக்கும் மருந்து விசிறும் செயற்பாடு இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.   

இராணுவத்தின் 51-வது படையணி கட்டளை அதிகாரியின் வழிகாட்டலில் 512 ஆவது படைப்பிரிவினரால் குறித்த செயற்பாடு இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.யாழ்ப்பாண நவீன சந்தை பஜார் வீதி நீர் ஊற்றி கழுவப்பட்டதோடு கிருமித் தொற்று நீக்கி மருந்து விசுறும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது.    நகரப்பகுதியினை சுத்தமாக்கும் செயற்பாட்டில் இராணுவத்தின் 51 ஆவது படையணியின் தளபதி மற்றும் 512 ஆவது படைப்பிரிவின் தளபதி மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் இராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *