இருளில் மூழ்குமா இலங்கை? மூடப்பட்டது மின் உற்பத்தி நிலையம்!

இருளில் மூழ்குமா இலங்கை? மூடப்பட்டது மின் உற்பத்தி நிலையம்!

இலங்கை மின்சார சபையின் சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் இன்மையாலேயே சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்திலும் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெட்ரோலிய கூட்டுத்தாபனம் ஊடாக 900 மெட்ரிக்தொன் எரிபொருளை இலங்கை மின்சார சபைக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இலங்கை மின்சார சபையில் இன்று மாலை 5மணி வரைக்குமே டீசல் மற்றும் உலை எண்ணெய் ஆகியவற்றின் கையிருப்பு, இருப்பதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்திருந்தார்.

முழு நாடும் நாளைய தினம் இருளில் மூழ்கும் என்று மின்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தமை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *