இலங்கைக்கு மருத்துவ உதவிகளை அனுப்பும் இந்தியா

இலங்கைக்கு மருத்துவ உதவிகளை அனுப்பும் இந்தியா

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் மருந்து, மருத்துவப் பொருட்கள் இல்லாமல் மருத்துவமனைகள் முடங்கியுள்ளன.

எனவே, இலங்கைக்கு மருத்துவப் பொருட்கள் மற்றும் மருந்துகளை அனுப்ப இந்தியா முடிவு செய்தது. இதனை இலங்கையின் சுகாதார அமைச்சர் சன்ன ஜெயசுமண உறுதிப்படுத்தியுள்ளார்.

எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கைக்கு வரும் இந்திய கடற்படைக் கப்பலில் 101 வகையான மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் அடங்கிய பொதி அனுப்பி வைக்கப்படவுள்ளது என்றார்

34 கோடி இலங்கை ரூபா பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை இந்தோனேஷியா அனுப்பவுள்ளதாகவும், அவை ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு வரும் எனவும் அவர் தெரிவித்தார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *