இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தைத் தாண்டியது

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தைத் தாண்டியது

நாட்டில் மேலும் 592 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அர சாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதில் 588 பேர் திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணி யில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

ஏனையோர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 04 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டு ள்ளனர்.

இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணி யில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 548 ஆக உயர்ந்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 231ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 8 ஆயிரத்து 478 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *