இலங்கையில் மேலும் 700க்கும் அதிகமானோர் பாதிப்பு!

இலங்கையில் மேலும் 700க்கும் அதிகமானோர் பாதிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 24 மணிநேரத்தில் 748 பேர் பாதிக்கப்பட்டதோடு நேற்றைய தினம் (6) 21 பேர் உயிரிழந்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்தார்.

இலங்கையில் இதுவரை மொத்தமாக 5 இலட்சத்து 69ஆயிரத்து 171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 14 ஆயிரத்து 505 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 11 ஆயிரத்து 555 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் 423 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 5 இலட்சத்து 43 ஆயிரத்து 111 பேர் குணமடைந்துள்ளனர்.  

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *