இலங்கை தொடர்பில் முக்கிய சர்வதேச நாடு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை தொடர்பில் முக்கிய சர்வதேச நாடு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கைக்கு வருகை தரும் பிரித்தானிய சுற்றுலா பயணிகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டால், எரிபொருள், உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு இலங்கையில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொள்ள வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இறக்குமதிக்கு செலுத்துவதற்கு பணம் இல்லாத காரணத்தினால் இலங்கையின் பொருளாதார நிலைமை சீரழிந்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மளிகைக் கடைகள், எரிவாயு நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் நீண்ட வரிசையில் நிற்பதாகவும் அவர்கள் எச்சரித்தனர்.வழமையான மின்வெட்டு தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனவும் வெளிநாட்டு சுற்றுலா தலங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவ முயற்சிப்பார்கள் எனவும் எச்சரித்துள்ளனர்.. 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *