ஈபிடிபி கட்சியினருக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் மூவர் கைது!!

ஈபிடிபி கட்சியினருக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் மூவர் கைது!!

வவுனியாவில் ஈபிடிபிக் கட்சியினருக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் மூவர் வவுனியா பொலிசாரால் இன்று (27.04) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.வவுனியா கூமாங்குளம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கை.க.லப்பாக மாறியதில் கட்சியின் வவுனியா மாவட்ட உதவிச் செயலாளர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா பொலிசார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *