உக்ரைன் – ரஷ்யா போர்: அமெரிக்காவிடமிருந்து அதிபயங்கர போர் விமானங்களை வாங்கும் பிரபல நாடு!

உக்ரைன் – ரஷ்யா போர்: அமெரிக்காவிடமிருந்து அதிபயங்கர போர் விமானங்களை வாங்கும் பிரபல நாடு!

உக்ரைன் மீது ரஷ்யா போர் 19 வது நாளாக போர் தொடுத்து வருகின்ற நிலையில் அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன எஃப்-35 ரக போர் விமானங்களை ஜெர்மனி வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் நாட்டின் பல்வேறு நகரங்களைதொடர்ந்து கைப்பற்றி வரும் ரஷ்ய துருப்புகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன. ஆனால், சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. 

இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் ஐரோப்பிய நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

உக்ரைன் நாட்டை ரஷ்யா கைப்பற்றும் பட்சத்தில் ஐரோப்பாவில் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் உருவாகலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தங்கள் ராணுவ பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. 

இந்த நிலையில், அமெரிக்காவிடமிருந்து 35 அதிநவீன எஃப்-35 ரக போர் விமானங்களை வாங்க ஜெர்மனி திட்டமிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் நாட்டின் ராணுவ பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஜெர்மனி இறங்கியுள்ளது.போர் விமானங்கள் மட்டுமின்றி ராணுவ உபகரணங்களையும் அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்ய ஜெர்மனி அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கொள்முதல் நடவடிக்கைகள் வரும் பட்ஜெட் தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *