உலகிலேயே மிகவும் செயற்றிறன் வாய்ந்த கொவிட் தடுப்பு மருந்து

உலகிலேயே மிகவும் செயற்றிறன் வாய்ந்த கொவிட் தடுப்பு மருந்து

உலகிலேயே மிகவும் செயற்றிறன் வாய்ந்த கொவிட் தடுப்பு மருந்தை விரைவில் தருவிக்கப்போவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

நேற்று (12) அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வைத் தொடர்ந்து ராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்துகின்றது. கொவிட் தொற்று தீவிரமாக உள்ள பிரதேசங்களில் நடமாட்டக் கட்டுப்பாடுகளை விதித்து தொற்றுப் பரம்பலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண மேலும் தெரிவித்தார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *