என்ன சொல்லப் போகிறார் ஜனாதிபதி?…

என்ன சொல்லப் போகிறார் ஜனாதிபதி?…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை(20) நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக, ஜனாதிபதி செயலகத்தை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறித்த செய்திக் குறிப்பில், எவ்வளவு நாட்களுக்கு நாட்டை முடக்கிவைப்பது என்பது பற்றிய தீர்மானத்தை ஜனாதிபதி இன்று அறிவிக்கவுள்ளார் என்றும், கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் இலங்கை முழுவதிலும் பயணத்தடையை விதிக்க அரசாங்கம் தீவிர ஆலோசனை நடத்திவருவதாக வெளியான செய்தியை அரச தரப்பு அடியோடு மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *