ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான அமர்வு – வெளியானது அறிவிப்பு

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான அமர்வு – வெளியானது அறிவிப்பு

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான அமர்வு எதிர்வரும் மார்ச் முதல்வாரத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வு எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.இந்த அமர்வின் போது இலங்கை தொடர்பிலான புதுப்பிக்கப்பட்ட எழுத்து மூல சமர்ப்பணத்தை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைக்கவுள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் உரையாடல் அமர்வு நடைபெறவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *