ஐ.நா.வில் அனைத்தையும் பொய்யென நிரூபிப்போம் -சரத் வீரசேகர சூளுரை

ஐ.நா.வில் அனைத்தையும் பொய்யென நிரூபிப்போம் -சரத் வீரசேகர சூளுரை

இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் பொய்யானவை என்பதை மார்ச் மாத மனித உரிமைகள் கூட்டத்தொடரில் நிரூபிப்போம்.

இவ்வாறு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் 8 தீர்மானங்களை, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கொண்டுவந்திருந்தார்.

அவ்வாறே 30 இன் கீழ் ஒன்று தீர்மானத்துக்கும் கடந்த நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரனை வழங்கியது.

இவ்வாறு இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவைப் பலவீனப்படுத்தும் செயற்பாடுகளையே கடந்த அரசாங்கம் மேற்கொண்டது.

எனினும் கோட்டாபய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், மீண்டும் புலனாய்வுப் பிரிவை பலப்படுத்தியுள்ளது.

எனவே இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டஅனைத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்பதை நாம் இம்முறை ஜெனிவா அமர்வில் நிருபிப்போம் என்றும் அமைச்சர் சரத் வீரசேகர மேலும் குறிப்பிட்டார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *