ஒருவரை கடத்திய குற்றச்சாட்டில் நால்வர் கைது !

ஒருவரை கடத்திய குற்றச்சாட்டில் நால்வர் கைது !

ஒரு கோடி ரூபாவை கப்பமாகப் பெறும் நோக்கில் நபர் ஒருவரைக் கடத்திச் சென்று நாரம்மல – மெதகொட பகுதியில் தடுத்து வைத்திருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமையக் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குவைத்திலிருந்து நாடு திரும்பிய கடத்தப்பட்ட நபர் மாத்தளை நோக்கிப் பயணித்த போது மாவத்தகம பகுதியில் வைத்துக் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *