கடலோரப் பகுதிகளில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது அதிகரிப்பு – சரத் வீரசேகர

கடலோரப் பகுதிகளில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது அதிகரிப்பு – சரத் வீரசேகர

கடலோரப் பகுதிகளில் கருவாடு உலர்த்துவதற்காக சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாக என, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த புகாரைத் தேடிப் பார்த்து விசாரிக்குமாறு சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பத்தலங்குண்டுவ, கல்பிட்டி, திருகோணமலை உள்ளிட்ட பாரிய அளவில் மீன்பிடி தொழிலை மேற்கொள்ளும் பகுதிகளில் சிறார்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கருவாடு உலர்த்துவதற்காக பணி நிமித்தம் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட சிறுவர்கள் தற்போது மழைக் காலம் என்பதால் அதன் உரிமையாளர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாகச் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன்படி குறித்த இடங்களுக்குச் சென்று சுற்றிவளைப்பை மேற்கொள்ளுமாறு பொலி ஸாருக்கு தகவல் விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *