கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற  24 பேர் கைது

கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 24 பேர் கைது

கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்லத் தயாரான 24 பேரைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இன்றைய தினம் பிற்பகல் கல்பிட்டி – குரக்கன்ஹேன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் மற்றும் மூன்று குழந் தைகளும் அடங்குவதாகக் கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த சந்தேகநபர்கள் சிறிய லொறி ஒன்றில் காத்திருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் படகின் மூலமா கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல தயாராகி இருந்தமை தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கடற் படையினர்  மேற்கொண்டு வருகின்றனர்.

han

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *