கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொக்கெய்ன் போதை மாத்திரைகளை விழுங்கிய நிலையில் நாட்டிற்குள் பிரவேசித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கென்ய நாட்டை சேர்ந்தவரை இலங்கை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று காலை டுபாயில் இருந்து இலங்கை வந்துள்ள நிலையில் விமான நிலையத்தின் எக்ஸ்ட்ரே பரிசோதனை செய்யும் போது அவரது வயிற்றில் ஏதோ ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு மேற்கொள்ளப்பட்ட மேலதிக பரிசோதனையில் அது கொக்கெய்ன் போதை மாத்திரைகள் என கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரது வயிற்றில் மொத்தமாக 17 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *