கனடாவில் நடந்த கொடூரம்!! காவல்துறையினர் வெளியிட்டுள்ள தகவல்

கனடாவில் நடந்த கொடூரம்!! காவல்துறையினர் வெளியிட்டுள்ள தகவல்

கனடாவின் எட்மண்டன் உயர்நிலை பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இந்திய வம்சாவளி மாணவன் இறந்த சம்பவம் தொடர்பில் 7 சந்தேக நபர்கள் மீது கொலைவழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.   

கடந்த 8ஆம் திகதி 16 வயதான Karanveer Sahota எனும் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்டு, ஒரு வாரத்திற்கு பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை வெளியான உடற்கூற்று அறிக்கையில், மார்பில் குத்தப்பட்ட காயமே மரணத்திற்கு காரணம் என்று உறுதிசெய்யப்பட்டது.இதனையடுத்து , எட்மண்டன் காவல்துறையினர் குறித்த சந்தேக நபர்கர்களுக்கு எதிராக இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் மீது முதலில் கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மாணவர் Karanveer Sahota மரணமடைந்த நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தில் மரணமடைந்த மாணவனும் சந்தேக நபர்களும் (மாணவர்கள்) நன்கு அறிமுகமானவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.  

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *