கம்பஹாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

கம்பஹாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

இலங்கையில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) அடையாளம் காணப்பட்ட 503 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 147 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 130 பேர் கம்பஹாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கண்டியில் 41பேரும் அம்பறை மற்றும் களுத்துறையில் தலா 28 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் இரத்தினபுரியில் 25 பேரும் புத்தளத்தில் 19 பேரும் யாழில் 11 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு குருநாகலில் 10 பேருக்கும் நுவரெலியாவில் 07 பேருக்கும் காலியில் 06 பேரும் மாத்தளை, மாத்தறை, அனுராதபுரம் மற்றும் கேக்கலையில் தல இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 987 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 17 ஆயிரத்து 560 பேர் குணமடைந்துள்ளதுடன் 6 ஆயிரத்து 309 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 118 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *