கருக்கலைப்புக்கு சட்டப்பூர்வ அனுமதி

கருக்கலைப்புக்கு சட்டப்பூர்வ அனுமதி

லத்தீன் அமெரிக்க நாடான ஆர்ஜன்ரீனாவில் கருக்கலைப்புக்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உலகில் பல நாடுகளில் கருக்கலைப்பு என்பது தண்டனைக்குரிய குற்றமாக இருந்து வருகிறது. சில நாடுகளில் மட்டுமே கருக்கலைப்புக்கு சட்டரீதியான அனுமதி உள்ள நிலையில் லத்தீன் அமெரிக்க நாடான ஆர்ஜன்ரீனாவில் கருக்கலைப்பு சட்டரீதியான அனுமதி அளிக்க கோரி பெண்ணிய அமைப்புகள் உள்ளிட்ட பலர் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இதுதொடர்பாக சமீபத்தில் செனட் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் தற்போது கருக்கலைத்தலுக்கு சட்டரீதியான அனுமதி வழங்குவதாக அறிவித்துள்ளது ஆர்ஜன்ரீனா.

லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே முதன்முறையாக இந்த சட்டரீதியான அனுமதி வழங்கும் முதல் நாடு ஆர்ஜன்ரீனா என்பது குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *