கறிவேப்பிலையாக்கப்பட்டுள்ளனர் – முருத்தெட்டுவ ஆனந்த தேரர்…

கறிவேப்பிலையாக்கப்பட்டுள்ளனர் – முருத்தெட்டுவ ஆனந்த தேரர்…

அரசாங்கத்திற்கு பெரும்பான்மை பெற்றுக்கொடுத்து இன்று அவர்களை ஆட்சிக்கு வருவதற்கு உதவியவர்கள் கறிவேப்பிலையாக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் வண. முருத்தெட்டுவ ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அவர் நடத்திய ஊடகவியளார் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாளாந்தம் இறப்பவர்களின் எண்ணிக்கைக்கேற்ப அமைச்சர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அது தொழிற்சங்கங்களின் பின்னால் பணிந்தது.

கொரோனாவை ஒடுக்க இருந்த நல்ல அதிகாரிகள் மாற்றப்பட்டனர். அவர்கள் நிபுணர்கள் மற்றும் படித்த அறிவாளிகளின் கருத்துக்களைக் கேட்பதில்லை. மூன்றில் இரண்டு பங்கு எப்போதும் இருக்கும் என்று வைத்துக்கொள்வோம்.

கொரோனா தொற்றுநோயை சமாளிக்க முடியாமல் சுகாதாரத்துறை இன்று சரிந்து வருகிறது. மருத்துவர்கள் முதல் இளநிலை ஊழியர்கள் வரை, நோய் அதிகரித்து வருகிறது. வல்லுனர்களின் பேச்சைக் கேட்காவிட்டால் இவர்களை வீட்டிலேயே இருக்குமாறு வலியுறுத்துகிறேன் என தெரிவித்தார். 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *