காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று முன்னெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று முன்னெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு.

தமிழ் அரசியல்வாதிகளிற்கும் சமல் ராயபக்‌ஷவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு கொழும்பை பாதுகாக்கும் முயற்சியே என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று முன்னெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

இம்மாதம் 3ம் திகதி , கொவிட் -19 தாக்கத்தின் மத்தியிலும், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே மிக முக்கியமான சந்திப்பு லண்டனில் நடந்தது. சீன ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் இலங்கையை தண்டிப்பதற்கு தமிழர்களின் துன்பத்திற்கான நீதியை ஒரு துரும்பாகப் பயன்படுத்துவது தொடர்பில் அங்கு பேச்சுக்கள் நடந்தன. இதேவேளை, தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும், நில அபகரிப்பு என்ற தலைப்பில் சிங்கள அமைச்சர் சமல் ராஜபக்ஷவை சந்திக்க ஒன்றுபட்டுள்ளனர்.

தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து பேசலாம், வேலை செய்யலாம் என்பதையே இது உலகுக்குக் காட்டியுள்ளது. தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்க எந்தவொரு வெளிநாட்டு ஈடுபாடும் தேவையில்லை என்பது தமிழ் அரசியல் தலைவர்களின் செய்தி. சிங்களவர்களுடன் பேசுவதன் மூலம் பலனளிக்கும் எந்த செயற்பாடும் இடம்பெறாது என்பதை 73 ஆண்டுகால பாடம் நமக்குக் கற்பித்திருக்கின்றது. தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காகவோ அல்லது தமிழ் தாயகத்தின் அபிவிருத்திக்காக அல்லது வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மாகாணசபைகளை அமைப்பதற்காகவோ ஒன்று கூடியதை நாங்கள் பார்த்ததில்லை.

இவர்களின் சந்திப்பானது இலங்கையில் அமெரிக்கா அல்லது இந்தியாவின் தலையீடு தேவையில்லை என்ற விம்பத்தை உலகிற்கு கூறியுள்ளது., தமிழர்களுக்கான அரசியல் சுதந்திரத்தில் தமிழ் அரசியல்வாதிகள் ஆர்வம் காட்டவில்லை என்பதுடன், எந்தவொரு இறையாண்மை அடிப்படையிலான தீர்விற்கும் தமிழ் அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள் போலவே தோன்றுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மனித உரிமை பேரவை அமர்வின் போது, ​​அதே தமிழ் அரசியல்வாதிகள் சிங்கள அமைச்சரை சந்தித்தனர். இது ஐ.சி.சி.க்கு பரிந்துரைப்பவரின் சர்வதேச இழப்பை ஏற்படுத்தியது. அதற்கு பதிலாக பொறுப்புக்கூறல் விடயம் ஸ்ரீலங்காவிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே இவர்களின் சந்திப்பு கொழும்பினை பாதுகாக்கும் முயற்சியாகவே நாம் பார்கிறோம்.இதனை தமிழர்களுக்கு வெளிப்படுத்துகிறோம். விழிப்புத்தான் ஒரு இனத்தின் விடுதலை. பத்திரிகையாளர் நிமலராஜனின் நீதியும் சர்வதேச ஈடுபாட்டை தமிழ் அரசியல்வாதிகளுக்கு உணர்த்தியிருக்கும் என்றனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *