கிளிநொச்சியில் இருவருக்கு கொரோனா தொற்று!

கிளிநொச்சியில் இருவருக்கு கொரோனா தொற்று!

வடக்கில் கிளிநொச்சியில் இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியாசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 266 பேருக்கு சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்று திருவையாறுப் பகுதியில் ஒருவர் மரணமடைந்த நிலையில், இறுதிக்கிரியைக்காக கொழும்பு ஆட்டுப்பட்டிததெரு பகுதியில் இருந்து வருகை தந்திருந்த நபரின் மகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர், தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேவேளை, கண்டாவளைப் பகுதியில் வீதி அமைப்பு வேலைக்காக வருகை தந்து, தற்போது தனிமைப்படுத்தலில் இருக்கும் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய பரிசோதனையில் வவுனியா தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் விமானப் படையைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏனைய 256 பேருக்கு கொரோனா தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *