கேபிள் கார் அறுந்து விழுந்ததில் 13 பேர் பரிதாப பலி

கேபிள் கார் அறுந்து விழுந்ததில் 13 பேர் பரிதாப பலி

இத்தாலியில் மேகியோர் ஏரியின் கரையில் உள்ள ஸ்டெரசவில் இருந்து மோட்டரோன் மலை உச்சிக்கு கேபிள் கார் செல்கிறது. இந்த பயணத்துக்கு சுமார் 20 நிமிடங்கள் ஆகும். இந்தப் பயணத்தின் போது நடுவில் ஒரு இடத்தில் கேபிள் கார் நிறுத்தப்படுமாம்.இந்நிலையில், இன்று மோட்டரோன் மலை உச்சிக்கு சென்ற கேபிள் கார் திடீரென அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 11 பேர் பரிதாபமாக பலியாகினர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மீட்புக் குழுவினர் விரைந்து சென்றனர். அங்கு மீட்கப்பட்ட 2 குழந்தைகளை ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டுரின் நகரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.கேபிள் கார் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு இத்தாலி பிரதம்ர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *