கொழும்புக்கு பிரவேசிக்கும்  வீதிக்கு பதிலாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் வீதி அபிவிருத்தி அதிகாரசபை கோரியுள்ளது.

கொழும்புக்கு பிரவேசிக்கும் வீதிக்கு பதிலாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் வீதி அபிவிருத்தி அதிகாரசபை கோரியுள்ளது.

புதிய களனி பாலத்தின் நிர்மாணப் பணிகள் காரணமாக பல வீதிகள் மூடப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை இவ்வாறு வீதிகள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொடை இடைமாறல் மற்றும் புதிய களனி பாலம் வரையான பகுதி மூடப்படவுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே, குறித்த வீதிக்கு பதிலாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் வீதி அபிவிருத்தி அதிகாரசபை கோரியுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *