கொழும்பு – வோர்ட் பிளேஸ் கொலை சம்பவத்திற்கான காரணம் வெளியானது!

கொழும்பு – வோர்ட் பிளேஸ் கொலை சம்பவத்திற்கான காரணம் வெளியானது!

கறுவா தோட்டம் வோர்ட் பிளேஸ் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. இதன்படி முச்சக்கரவண்டி சாரதியின் கையடக்க தொலைபேசியைக் கொள்ளையடிப்பதற்காக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. கறுவா தோட்டம் வோர்ட் பிளேஸ் பகுதியில் கடந்த 23ஆம் திகதி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். குறித்த இருவரிடமும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் இந்த விடயம் தெரியவந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர் . கைதானவர்கள் கிரேண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 48 வயதுகளையுடையவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த இருவரும் ஐஸ் ரக போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் எனவும் குறித்த போதைப்பொருளைக் கொள்வனவு செய்வதற்காக அவர்கள் அந்த முச்சக்கரவண்டியின் சாரதியைக் கொலை செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *