கோட்டாபயவிடம் இன்று கையளிக்கப்படவுள்ள முக்கிய அறிக்கை.

கோட்டாபயவிடம் இன்று கையளிக்கப்படவுள்ள முக்கிய அறிக்கை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்து மீண்டும் நியமிக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவின் அறிக்கை இன்று (ஏப்ரல் 5) ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்..

புதிய குழுவின் அறிக்கையை கடந்த 15 ஆம் திகதி சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது, எனினும் விசாரணைக்கு குழு மேலதிகமாக இரண்டு வாரங்கள் எடுத்தது, இது 30 ஆம் திகதியுடன் காலாவதியானது.அதன்படி, குழுவின் அறிக்கை இன்று (ஏப்ரல் 5) அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன் குழு உறுப்பினர்களால் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *