கோவையில் ஜூன் மாதம் நடக்கிறது 8 அணிகள் பங்கேற்கும் தமிழ்நாடு பேட்மிண்டன் லீக்

கோவையில் ஜூன் மாதம் நடக்கிறது 8 அணிகள் பங்கேற்கும் தமிழ்நாடு பேட்மிண்டன் லீக்

தமிழ்நாடு பேட்மின்டன் சங்கம் சார்பில் 2-வது மாநில பேட்மிண்டன் சூப்பர் லீக் போட்டி இந்த ஆண்டு நடத்தப்படுகிறது.

இந்த போட்டி ஜூன் மாதம் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. கல்லூரியில் நடக்கிறது.

இந்த போட்டியில் சென்னை பிளையிங், கிரா விடி, கோவை கொம்பன்ஸ், மதுரை வீரன்ஸ், கரூர் ஸ்மார்சஸ், விழுப்புரம் பால்கன் பெதர்ஸ், மெரினா சூப்பர் கிங்ஸ், திருப்பூர் வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து முன்னணி வீரர்- வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு அணியிலும் 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு பேட்மிண்டன் சூப்பர் லீக் போட்டியில் ஒவ்வொரு அணியிலும் வீரர்- வீராங்கனைகள் இடம்பெறுவதற்கான ஏலம் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

இதில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருபவருமான சுரேஷ் ரெய்னா பங்கேற்றார். அவர் இந்த போட்டியின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கிறார்.

சர்வதேச பேட் மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா, நடிகை நிக்கி கல்ராணி, தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க செயலாளர் அருணாசலம், போட்டி அமைப்புக்குழு சேர்மன் சிவகுமார் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *