சிகரெட்டை உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்தும் நிகழ்வில் -வீரவன்ச

சிகரெட்டை உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்தும் நிகழ்வில் -வீரவன்ச

அமைச்சர் வீரவன்ச அண்மையில் ஆயுர்வேதக் கூறுகளுடன் உள்ளூரில் தயாரிக்கப்படும் கறுவா அடிப்படையிலான சிகரெட்டை உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

அமைச்சரால் ஊக்குவிக்கப்பட்ட கறுவா அடிப்படையிலான சிகரெட் வர்த்தக நாமத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென புகையிலை மற்றும் அல்கஹோல் தொடர்பான தேசிய அதிகார சபை(NATA) எச்சரித்திருந்தது.

தேவையான அரச நிறுவனத்திடம் அனுமதி பெறாமல் சிகரெட்டை ஆரம்பிப்பது சட்டத்தை மீறுவதாக அந்த அதிகார சபையின் தலைவர் விராஜ் பண்டாரநாயக்க ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

கறுவா அடிப்படையிலான சிகரெட்டுக்கு தாம் அனுமதி வழங்கவில்லை என ஆயுர்வேத திணைக்களமும் சுகாதார அமைச்சும் அதிகாரசபைக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *