சிரியா மீது இஸ்ரேல் விமானங்கள் மீண்டும் தாக்குதல்

சிரியா மீது இஸ்ரேல் விமானங்கள் மீண்டும் தாக்குதல்

சிரியாவின் ஹமா பகுதிய இலக்குவைத்து இஸ்ரேலின் விமானங்கள் மேற்கொண்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர் என சிரியா தெரிவித்துள்ளது
இஸ்ரேலின் விமானங்கள் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலிலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என சிரியா தெரிவித்துள்ளது.
பல ஏவுகணைகளை தனது ஏவுகணை எதிர்ப்பு பொறிமுறைகள் சுட்டுவீழ்;த்தியுள்ளன என  சிரியா தெரிவித்துள்ளது.
லெபனானிற்குள ஊடுருவுவதற்கு முன்னதாக சிரியா மீது தாக்குதல் இடம்பெற்றதாக சிரியா தெரிவித்துள்ளது.காலை நான்கு மணிக்கு இஸ்ரேலிய விமானங்கள் வான் வெளி அத்துமீறலில் ஈடுபட்டன என தெரிவித்துள்ள இஸ்ரேலின்;சனா செய்தி சேவை லெபனானின் திரிபோலி நகரத்தின் பக்கமாகயிருந்து சிரியாவின் ஹமாவை நோக்கி ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றன எனவும் குறிப்பிட்டுள்ளன.
இஸ்ரேலின் இந்த தாக்குதல் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டுள்ளனர் என சனா செய்தி சேவை தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக பைடன் பதவியேற்ற பின்னர் இடம்பெற்ற முதலாவது தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *