சிறுவர்களுக்காக 18 நீதிமன்றங்களை நிறுவத் தீர்மானம்

சிறுவர்களுக்காக 18 நீதிமன்றங்களை நிறுவத் தீர்மானம்

சிறுவர்களுக்காக 18 சிறுவர் நீதிமன்றங்களை  நிறுவுவதற்காக நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தேசிய சிறுவர் பாது காப்பு ஆணைக்குழுவின் துணைத் தலைவர் நீதிபதி சுஜாதா அழகப்பெரும தெரிவித்தார்.
நாட்டின் ஒன்பது மாகாணங்களை உள்ளடக்கும் வகையில் சிறு வர்களுக்கான 09 நீதவான் நீதிமன்றம் மற்றும் சிறுவருக்கான 09 உயர் நீதிமன்றங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். ‘சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் ஊடகங்களின் சமூக பாதிப்பு ஆகியன குறித்து அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் சுஜாதா அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
தற்போது கொழும்பு பத்தரமுல்ல மற்றும் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் சிறுவர்களுக்கான நீதவான் நீதிமன்றம் இரண்டு இயங்குவதாகவும் அது போதுமானதாக இல்லை எனவும் அந்த நீதி மன்றங்களில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் இருப் பதால் வழக்குகளை ஒத்திவைக்கும் நிலைமை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகக் குறித்த பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்வதற்காகச் சிறுவர்களுக்கான 09 நீதவான் நீதிமன்றம் மற்றும் சிறுவருக்கான 09 உயர் நீதிமன்றங்களை நிறுவுவதற்கு அரசாங்கத்திற்கு யோசனை முன்வைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *