சிறுவர் இல்லத்தின் தலைமைக் கண்காணிப்பாளர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது

சிறுவர் இல்லத்தின் தலைமைக் கண்காணிப்பாளர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது

அநுராதபுரத்திலுள்ள ‘அவந்தி தேவி’ சிறுவர் இல்லத்தின் தலைமைக் கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.

குறித்த சிறுவர் இல்லத்திலிருந்து பல துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவானதையடுத்து அநுராதபுரம் பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்தச் சிறுவர் இல்லத்தில் தங்கியிருக்கும் 52 சிறுமிகளிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். அதில் சிறுமிகள் மீதான கொடுமை மற்றும் துஷ்பிரயோகம் பற்றிய விபரங்கள் வெளிப்பட்டுள்ளன.

இது குறித்து அநுராதபுரம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *