சிவலிங்கத்தை கண்டது தொல்பொருள் ஆய்வில் ஈடுபட்டவர்களுக்கு அதிர்ச்சி -நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன்

சிவலிங்கத்தை கண்டது தொல்பொருள் ஆய்வில் ஈடுபட்டவர்களுக்கு அதிர்ச்சி -நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன்

பெரும்பான்மையினத்தவர்களை மாத்திரம் கொண்ட தொல்பொருள் ஆய்வுக்குழுக்களினால் தமிழர்களின் வரலாற்று அடையாளங்களை மறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.

குருந்தூர் மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள சிதைவுகள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குருந்தூர் மலைப்பகுதியில் சிங்கள பௌத்த அடையாளங்கள் காணப்படுவதாக நிறுவும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்வின் போது சிவலிங்கத்தை ஒத்த சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை தொல்பொருள் ஆய்வில் ஈடுபட்டவர்களுக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது என்பதே உண்மையாகும்.

உண்மையில் குருந்தூர் மலைப்பகுதியில் சிவவழிபாடு இடம்பெற்றமைக்கும் தமிழ் மக்கள் வாழ்ந்தமைக்குமான அடையாளங்களே காணப்படுகின்றன.

உண்மையில் கந்தரோடை போன்ற இடங்களில் விரிவான அகழ்வாராய்வுகளை முன்னெடுக்கும் பட்சத்தில் அங்கு தமிழ்ப் பிராமி எழுத்துக்களைக் கண்டறிய முடியும்.

எனவே அங்கு அகழ்வாராய்வுகளை முன்னெடுப்பதில் அரசாங்கம் அக்கறை காட்டவில்லை.

மாறாக தமிழர்களின் அடையாளங்கள் காணப்படும் பகுதிகளில் தனிச்சிங்கள தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் ஆராய்வுப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *