ஜனாதிபதி படை அதிகாரிகளைப் பயன்படுத்தி அனைத்து விடயங்களையும் சாத்தியமாக்கலாம் -ரவூப் ஹக்கீம்

ஜனாதிபதி படை அதிகாரிகளைப் பயன்படுத்தி அனைத்து விடயங்களையும் சாத்தியமாக்கலாம் -ரவூப் ஹக்கீம்

நாட்டின் சிவில் நிர்வாகத்துறை முழு இராணுவ மயமாகின்ற நிலையில் சென்றுகொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கொரோனா விடயங்களை கையாள்வதற்காக மாவட்ட ரீதியாக இராணுவ அதிகரிகள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆட்சி மாற்றம் இடம்பெற்றதன் பின்னரான சூழலில் நாட்டின் சிவில் நிர்வாகத்துறையில் முப்படைகளையும் சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் பலர் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

நாட்டின் ஜனாதிபதி படை அதிகாரிகளைப் பயன்படுத்தி அனைத்து விடயங்களையும் நடைமுறைச் சாத்தியமாக்கலாம் அல்லது அவர்களுடன் பணியாற்றுவது தனக்கு இலகுவானது என்று கருதமுடியும்.

அதற்காக, சிவில் நிர்வாகத்தில் மேலும் மேலும் படை அதிகரிகளை இணைத்துக்கொள்கின்றமையாது நாட்டில் படைத்துறையை மையப்படுத்திய நிர்வாகமொன்று விரைவில் ஏற்படும் அபாயத்தினை உருவாக்குவதாக உள்ளது.

விசேடமாக, கொரோனா நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான பொறுப்பு, முப்படைகளின் தளபதி தலைமையிலான தேசிய செயலணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதனை ஓரளவிற்கேனும் ஏற்றுக்கொண்டாலும், அதன் பின்னர் சுகாதார அமைச்சின் செயலாளராக முன்னாள் இராணுவ அதிகரியை நியமித்தமை தற்போது மாவட்டம் தோறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக இராணுவ அதிகாரிகளை நியமித்தமை பெரும் அச்சத்தினை ஏற்படுத்துவதாக உள்ளது.

முஸ்லிம்களின் உணர்வுரீதியான விடயங்களில் தொடர்ச்சியாக காண்பிக்கப்படும் பாரபட்சங்களால் அந்த மக்கள் கொதித்துப்போயுள்ள நிலையில் இராணுவத்தின் ஊடாக அவர்களின் வெளிப்பாடுகளை கட்டுப்படுத்த முனைவதானது மிகத் தவறானதொரு அணுகுமுறையாகும்.அதுமட்டுமன்றி, ஜனநயாகவிரோத செயற்பாடுமாகும்.

எனவே இவ்விதமான சர்வாதிகார இராணுவ ஆட்சியை நோக்கிய போக்கினை ஜனாதிபதி உடனடியாக கைவிட வேண்டியது அவசியமாகும் என்றார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *