டொலர் நெருக்கடி தீவிரம் -எரிபொருள் இறக்குமதி பெரும் நெருக்கடியில்

டொலர் நெருக்கடி தீவிரம் -எரிபொருள் இறக்குமதி பெரும் நெருக்கடியில்

அடுத்த மாதம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தேவையான 42 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 8,610 மில்லியன் ரூபா) தொகையை கண்டுபிடிக்க முடியாமல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தப் பணத்தைக் கோரியிருந்த போதிலும், இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ரூபாவை கண்டுபிடிக்க முடியும் என்றாலும் டொலரை கண்டுபிடிக்க முடியாது எனவும் இந்த நிலையில் எரிபொருள் இறக்குமதி கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் அமைச்சர் அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெற்றோலிய கூட்டுத்தாபனம் இரண்டு அரச வங்கிகளுக்கும் சுமார் 3700 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் இலங்கை வங்கி சுமார் 196 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் மக்கள் வங்கி சுமார் 176 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் செலுத்த வேண்டியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *