தடுப்பூசி பெறாமலும் இலங்கைக்கு வருகை தரலாம்…

தடுப்பூசி பெறாமலும் இலங்கைக்கு வருகை தரலாம்…

கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக் கொண்டுள்ள இந்திய பிரஜைகள் இலங்கைக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளலாம். ஏனைய நாட்டவர்கள் தடுப்பூசி பெறாமலும் இலங்கைக்கு வருகை தரலாம் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். எனினும் விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே சுற்றுலாவை தொடர அனுமதியளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது, ஆனால் விமான நிலையங்கள் மூடப்படவில்லை. ஆகவே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தரலாம். ஒரு சில நாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நீடிக்கப்படும் என்றார்.

நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலா பிரயாணிகள் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமையவே செயற்பட வேண்டும். சுற்றுலாப் பயணிகள் தங்குமிடம், மற்றும் சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளும் இடங்கள் ஆகியவை முழுமையாக கண்காணிக்கப்படும். சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய சுற்றுலாத்துறை சேவையினை முன்னெடுத்து செல்வது கட்டாயமாகும் என்று மேலும் குறிப்பிட்டார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *