தடை செய்யப்பட்ட பகுதியாக இலங்கை அகதிகள் முகாம்!

தடை செய்யப்பட்ட பகுதியாக இலங்கை அகதிகள் முகாம்!

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாள்புரத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் பலருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

இந்த முகாமில் 191 குடும்பங்களைச் சேர்ந்த 552 பேர் வசித்து வருகிறார்கள். 

இங்கு வசித்து வரும் இலங்கை அகதிகள் 6 பேருக்கு அண்மையில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இதில் 2 பேர் ஆண்கள், 4 பேர் பெண்கள் ஆவார்கள்.

இவர்கள் 6 பேரும் கோட்டாரில் உள்ள மாவட்ட சித்த மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

இவர்களுடன் தொடர்பில் இருந்த 50 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன் முடிவு நேற்று வெளிவந்தது. 

இதில் மேலும் 3 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுஉள்ளது.

இதில் 8 வயது சிறுவன் 25 வயது வாலிபர் மற்றும் 40 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து கொட்டாரம் பெருமாள்புரத்தில்உள்ள இலங்கை அகதிகள் முகாம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *