தமிழகத்தில் 1 மணி வரை 39.61 சதவீத வாக்குகள் பதிவு

தமிழகத்தில் 1 மணி வரை 39.61 சதவீத வாக்குகள் பதிவு

காலை 7 மணி முதலே அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.இந்நிலையில்  தமிழக சட்டசபை தேர்தலில் 1 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:

தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 39.6 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.தமிழகத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 41.79 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.தமிழகத்தில் குறைந்தபட்சமாக நெல்லை மாவட்டத்தில் 32.29 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.சென்னையில் மதியம் 1 மணி நிலவரப்படி 37.16 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.புதுச்சேரியில் மதியம் 1.30 மணி வரை 53.01 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *