தமிழ் மக்களுக்கு இராணுவத்தினர் மீது கோபம் இருக்கவில்லை-சரத் பொன்சேகா

தமிழ் மக்களுக்கு இராணுவத்தினர் மீது கோபம் இருக்கவில்லை-சரத் பொன்சேகா

தமிழ் மக்கள் இராணுவத்தினர் மீது கோபம் கொள்ளவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.நாடாளுமன்றம் இன்றைய தினம் சபாநாயகர் தலைமையில் கூடிய போது சரத் பொன்சேகா மீது பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

குறிப்பாக புலம் பெயர் தமிழர்களின் பணத்திற்காக ஸ்ரீலங்கா இராணுவத்தினை சரத் பொன்சேகா காட்டிக் கொடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.இதன்போது உரையாற்றிய பொன்சேகா,தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மனித உரிமைகளை பாதுகாத்து யுத்தம் புரிந்தமையால்தான் தமிழ் மக்கள் இராணுவத்தளபதியான எனக்கு வாக்களித்தார்கள். அது தொடர்பில் நாங்கள் பெருமைப்பட வேண்டும்.தமிழ் மக்களுக்கு இராணுவத்தினர் மீது கோபம் இருக்கவில்லை என்றார்.  

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *