தம்மிக நிரோஷன சுட்டுக் கொலை – பெண் ஒருவர் உட்பட இருவர் கைது !

தம்மிக நிரோஷன சுட்டுக் கொலை – பெண் ஒருவர் உட்பட இருவர் கைது !

முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக நிரோஷன சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தம்மிக நிரோஷனவை கொலை செய்வதற்குத் துப்பாக்கி மாத்திரமின்றி ஆயுதம் ஒன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் பலபிட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டமையை அடுத்து எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மற்றுமொரு பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரது வங்கிக் கணக்குக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாகக் பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *