தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதா?

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதா?

நாளை மறுதினம் சனிக்கிழமை (22ம் திகதி) நடைபெறவுள்ள தரம் 5 புலமை பரிசில் பரீட்சைகளுக்கான நேரத்தில் மாற்றம் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைக்கான நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவின் ஆணையாளர் காயத்திரி அபேகுணசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்காக வழங்கப்பட்ட நேரமே, இம்முறையும் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

புலமைப் பரிசில் பரீட்சையின் பகுதி 01 வினாத்தாளுக்கு 45 நிமிடங்கள் வழங்கப்பட்டிருந்த கால எல்லையை, 2020ம் ஆண்டு ஒரு மணிநேரமாக அதிகரித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி, முதல் பகுதிக்கு ஒரு மணித்தியாலமும், இரண்டாவது பகுதிக்கு ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார். இதனைவிட நேரத்தில் வேறு எவ்வித அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *