துப்பாக்கிகளுடன் 06 இலங்கை மீனவர்கள் கைது

துப்பாக்கிகளுடன் 06 இலங்கை மீனவர்கள் கைது

ரஷ்ய தயாரிப்பான Ak 47 துப்பாக்கிகள் ஐந்து மற்றும் அதற்குரிய ரவைகள் 1000 உடன் இலங்கை மீனவர்கள் ஆறுபேர் கேரள கடற்பரப்பில் இந்திய கடலோர காவற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கை மீனவர்கள் சென்ற படகை சுற்றிவளைத்த இந்திய கடலோர காவற்படை அதனை சோதனை செய்த வேளை அந்தப் படகில் இருந்த 300 கிலோ 323 கிராம் ஹெரோயின், 5 ஏகே.47 ரஷ்ய துப்பாக்கிகள், ஆயிரம் ரவைகள், மற்றும் பல முக்கியமான ஆவணங்கள் போன்றவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பாக ஆறு இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.உளவுத்துறையினர் போதைப் பொருள் குழுவின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்டு தகவல் அளித்ததன் பேரில் போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *