நாட்டு மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி!! எரிபொருட்களின் விலை எகிறியது

நாட்டு மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி!! எரிபொருட்களின் விலை எகிறியது

 நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு நள்ளிரவு முதல் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றரொன்றின் விலை 177 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன் விலை 157 ரூபாவிலிருந்து 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே 95 ஒக்டேன் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 23 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 207 ரூபாவாக அதிகரித்துள்ளது.

முன்பு 95 ஒக்டேன் பெட்ரோல் லீற்றரொன்றில் விலை 184 ரூபாவாக இருந்தது. புதிய விலை உயர்வால் ஒரு லீற்றர் ஒட்டோ டீசல் 111 ரூபாவிலிருந்து 121 ரூபாவாக உயர்ந்துள்ளது. இதன் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 159 ரூபாவாகும். 144 ரூபாவாக இருந்த இதன் விலையை 15 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 77 ரூபாவாக இருந்த மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 87 ரூபாவாகும். இதன் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *